மூன்று தகவல் ஆணையர்களைஆறு வாரத்தில் நியமிக்க உத்தரவு
'மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள, மூன்று தகவல் ஆணையர் பணியிடங்களையும், ஆறு வாரத்துக்குள் நிரப்ப வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டில்லி ஐகோர்ட்டில், தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் ஆர்.கே.ஜெயின் உட்பட, மூன்று பேர் தாக்கல் செய்த மனு: மத்திய தகவல் ஆணையத்தில், மூன்று தகவல் ஆணையர் பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன. இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு, மத்திய தகவல் ஆணையம் பலமுறை கடிதம் எழுதியும் பலனில்லை. அதனால், மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள, மூன்று தகவல் ஆணையர் பணியிடங்களையும் உடனே நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.மனுவை விசாரித்த டில்லி ஐகோர்ட், 'மூன்று தகவல் ஆணையர் பணியிடங்களையும், ஆறு வாரத்துக்குள் நிரப்ப வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.