தலைமை செயலகம் குவிந்த அதிகாரிகள்
அமைச்சர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் வாழ்த்து சொல்ல, சென்னை, தலைமைச் செயலகத்திற்கு அதிகாரிகள் படையெடுத்ததால், எழிலகம் வளாகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.
புத்தாண்டின் முதல் அலுவலக நாளான, நேற்று, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், வழக்கம் போல பணிக்கு வந்தனர். உயர் அதிகாரிகளுக்கு, பூங்கொத்து, ஆப்பிள், எலுமிச்சம் பழம், இனிப்பு வழங்கிய கீழ்மட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களின் வாழ்த்தை பெற்ற உயர் அதிகாரிகள், சட்டசபை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில், துறையின் முக்கிய அதிகாரி கள், அமைச்சர்கள், அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, தலைமைச் செயலகத்திற்கு சென்றனர்.
காலை, 11:00 மணிக்கு தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதா, பகல், 1:30 மணி வரை அலுவல்களை கவனித்ததால், எழிலகம் வளாகத்தில் இருந்து வந்த அதிகாரிகளை சந்திப்பதை, தலைமைச்செயலக அதிகாரிகள், அமைச்சர்களின் உதவியாளர்கள் தவிர்த்தனர். முதல்வர் வீட்டுக்கு சென்ற பின், மதிய உணவுக்கு பின், எழிலக வளாக அதிகாரிகளை சந்தித்தனர். மாலை, 4:00 மணிக்கு பிறகே, எழிலக அதிகாரிகள் பணிக்கு திரும்பினர். இதனால், எழிலகத்தில், நேற்றைய அலுவல் முழுவதும் பாதிக்கப்பட்டது.
அதிகாரிகளை சந்திக்க, வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.