சத்துணவு ஊழியர்கள் ஜன., 21ல் போராட்டம்
வரும், ஜன., 21ல், தமிழகத்தில் உள்ள, கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட, சத்துணவு பணியாளர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்புக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. மாநில அமைப்பாளர் வரதராஜன் கூறியதாவது:சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை, முழுநேர ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 21ல், தமிழகம் முழுவதும் உள்ள, கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.