ஜன. 22 சென்னையில் போராட்டம் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்பு
:ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்புத்துறை ஊழியர் சங்க மாநிலத்தலைவர் கணேசமூர்த்தி கூறியதாவது: 2011 சட்டசபை தேர்தலில் 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசுவதாக முதல்வர் வாக்குறுதி அளித்தார். நான்கரை ஆண்டுகளில் ஒருமுறை கூட அழைத்து
பேசவில்லை.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். அரசு துறைகளில் 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஜன., 22 சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த உள்ளோம்.இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஒரு லட்சம் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர், என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.