தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று துவக்கம்
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத் தொடர், கவர்னர் உரையுடன் இன்று(ஜன.,20) துவங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜனவரியில் நடைபெறும், சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில், கவர்னர் உரை நிகழ்த்துவார். அதன்படி இன்று காலை, 10:30 மணிக்கு, கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார். இன்று காலை கவர்னர் உரை முடிந்ததும், சபாநாயகர் தனபால் தலைமையில், அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். அதில், கவர்னர் உரை மீதான விவாதத்தை, எத்தனை நாட்களுக்கு நடத்துவது என, முடிவு செய்யப்படும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.