துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கம் சென்னை பள்ளி மாணவனுக்கு
முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை முகப்பேரைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் சு.ரித்திக் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற ரித்திக்கிற்கு எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகள் படைத்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்ற ரித்திக்கிற்கு ஊக்கத் தொகையாக ரூ.4 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.