.
வெள்ளி, 26 டிசம்பர், 2014
மாணவர்கள் முன்பு ஆசிரியர்கள் அடிதடி..!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்ணைவிளையிலுள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில், ஆண்- பெண் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். ஏரல் அருகே பண்ணைவிளையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில்மாசில்லா 50 என்பவர் உதவி தலைமையாசிரியராக உள்ளார். இதே பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ், 48, ஆசிரியராக பணியயாற்றி வருகிறார்.
ஆண்ட்ரூஸ் குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதவி தலைமையாசிரியை மாசில்லா ஆண்ட்ரூஸை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஏரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.