6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவின்படி, தேனி மாவட்ட கலெக்டராக உள்ள பழனிச்சாமி திருச்சி மாவட்ட கலெக்டராகவும், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக உள்ள வெங்கடாசலம் தேனி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். விருதுநகர் கலெக்டராக உள்ள ஹரிஹரன் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராகவும், சிவகங்கை மாவட்ட கலெக்டராக உள்ள ராஜாராமன் விருதுநகர் மாவட்ட கலெக்டராகவும், நாகப்பட்டினம் கலெக்டராக உள்ள முனுசாமி சிவகங்கை கலெக்டராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி கலெக்டராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் கூட்டுறவு சங்க பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.