பள்ளிக்கு சென்ற மாணவி குத்திக்கொலை:
கரூரில் பட்டப்பகலில் பயங்கரம்! கரூர்: பள்ளிக்கு சென்ற மாணவியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் ரங்கபாளையத்தில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தவர் பாரதி பிரியா. இவர், இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மாணவி பிரியாவை, வாலிபர் மனோஜ் வழிமறித்து திடீரென கத்தியால் குத்தியுள்ளார். அதோடு, மனோஜ் தனக்கு தானே கத்தியால் குத்திக் கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த இரண்டு பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மாணவி பிரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாலிபர் மனோஜிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பள்ளி மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
புதன், 7 ஜனவரி, 2015
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.