10ம் வகுப்பு தேர்வு26 பேர் முறைகேடு
சென்னை :பத்தாம் வகுப்பு ஆங்கிலம், இரண்டாம் தாள் தேர்வில், காப்பியடித்து பிடிபட்டோர் எண்ணிக்கை, 26 ஆக குறைந்தது. வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.நேற்றைய தேர்வில், பாடப் புத்தகத்தில் இருந்தே, கேள்விகள் இடம் பெற்றன. வினாத்தாள் எளிமையாக இருந்ததாக, பெரும்பாலான மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
நேற்றைய தேர்வில், முறைகேட்டில் சிக்கியோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தமிழகம் முழுவதும், 24 தனித்தேர்வு மாணவர்கள் உட்பட, 26 பேர் மட்டுமே பிடிபட்டனர். ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், 74 பேர் சிக்கினர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.