தேர்வு எழுத சென்ற 15 மாணவர்கள் காயம்
பண்ருட்டி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவியர், 15 பேர் விபத்தில் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே அரசு பள்ளி மாணவ, மாணவியர், 15 பேர், பொதுத்தேர்வு எழுத சேமக்கோட்டை அரசு பள்ளிக்கு, ஷேர் ஆட்டோவில், நேற்று காலை சென்று கொண்டிருந்தனர். எதிரே வந்த டாடா ஏஸ் வேன் மோதியதில், ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. இதில், நித்யா, 16, என்ற மாணவி படுகாயமடைந்து, புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்; மற்ற மாணவ, மாணவியர் லேசான காயத்துடன் தப்பினர்; முதலுதவி சிகிச்சைக்குப் பின், அவர்கள் தேர்வு எழுத சென்றனர்; போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.