!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

செவ்வாய், 30 ஜூன், 2015

புத்தகம் வாங்க பல மணி நேரம் காத்திருக்கும் பெற்றோர்

தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு, பிளஸ் 2 வரை, இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கான சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான தமிழ் புத்தகங்கள் போன்றவை, பாடநுால் கழகம் மூலம் விற்கப்படுகின்றன.

ஆனால், பாடநுால் கழகத்தில் தேவையான புத்தகங்களை, சரியாக இருப்பு வைக்காததால், தனியார் பள்ளிகள் ஒவ்வொரு பாடப்பிரிவின் புத்தகங்களையும் பெற, தனித்தனியாக அலைய வேண்டிய நிலைமை உள்ளது. இதனால், பெரும்பாலான பள்ளிகள், புத்தகங்களை கடைகளிலோ அல்லது சென்னை டி.பி.ஐ., வளாக விற்பனை மையத்திலோ வாங்கும்படி, பெற்றோரை அறிவுறுத்திஉள்ளன.
ஆனால், புத்தகக் கடைகளில் பாடப் புத்தகங்கள் கிடைப்பதில்லை; சென்னை, நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாக புத்தக விற்பனை மையத்தில் புத்தகம் வாங்க, பெற்றோர் வருகின்றனர்.அங்கு, கூட்டத்தை சமாளிக்கவோ, புத்தக
விற்பனையை எளிமைப்படுத்தவோ, பாடநுால் கழகம் உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை. தினமும், 5,000 பேர், பாடப் புத்தகம் வாங்க வருகின்றனர்; நான்கு விற்பனை கவுன்டர்கள் மட்டும் உள்ளன. பெற்றோர், மணிக்கணக்கில் வரிசையில் நின்று, புத்தகங்களை வாங்க வேண்டி உள்ளது.கண்டுகொள்வதில்லை பெற்றோர் சிலர் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் நடக்கிறது. கூடுதல் கவுன்டர்கள் திறக்ககோரிக்கை விடுத்தாலும், பாடநுால் கழக அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை; கூடுதல் ஆட்களையும் நியமிப்பதில்லை. உயர் அதிகாரிகளிடம் சென்று முறையிட்டால், 'நாங்கள் தனியாருக்கு புத்தகம் விற்க முடியாது. பள்ளிகளுக்கு மொத்தமாகத் தான் சப்ளை செய்வோம். பள்ளிகள் மொத்தமாக வாங்காவிட்டால், நாங்கள் என்ன செய்வது. வேண்டுமென்றால், மெட்ரிக் இயக்குனர் அலுவலகத்தில், பள்ளிகள் மீது புகார் செய்யுங்கள்' என்கின்றனர்.
மெட்ரிக் அலுவலகம் சென்றால், 'எங்களுக்கும், புத்தக வினியோகத்துக்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் பாடநுால் கழகம் செல்லுங்கள்' என, திருப்பி அனுப்புகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முப்பருவ புத்தகங்கள் இல்லை:* பாடநுால் கழக விற்பனை மையத்தில், என்ன புத்தகம் இருப்பு உள்ளது என்பதை, தினமும்,தகவல் பலகையில்எழுதிவைப்பதில்லை.
* பெற்றோர் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து, கவுன்டர் அருகே செல்லும் போது, 'இந்த புத்தகம் இருப்பு இல்லை; விற்பனைக்கு இல்லை' என்று கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
* தற்போது வரை, இந்த விற்பனை மையங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்களையே விற்பனை செய்கின்றனர். ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள, முப்பருவ புத்தகங்கள் இன்னும் முழுமையாக விற்பனைக்கு வரவில்லை.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png