அரசு விளையாட்டு விடுதிகளில் ஜூலை 3ல் மாணவர் சேர்க்கை
தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரை விளையாட்டுத் துறையில் சாதிக்க வைக்கும் வகையில், விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில், 28 இடங்களில், பயிற்சி, தங்கும் இடம், உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் உள்ளன. இதற்கான சேர்க்கை, ஜூலை 3ம் தேதி நடக்கிறது.
தடகளம், கைப்பந்து, வளைகோல்பந்து, இறகுப்பந்து நீச்சல், கூடைபந்து, கபாடி, கிரிக்கெட், பளுதுாக்குதல் மற்றும் வாள்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், சென்னை, ஆகிய இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவியர், அதற்குரிய படிவங்களை, www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.