84 எம்.பி.பி.எஸ்., இடமே உள்ளது இன்றுடன் முடிகிறது கலந்தாய்வு
சென்னை: மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன் முடிகிறது. அரசு கல்லுாரிகளில் 84 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு 19ம் தேதி துவங்கி சென்னை ஓமந்துாரார் மருத்துவமனையில் நடந்து
வருகிறது. ஆறாம் நாளாக நேற்று நடந்த கலந்தாய்வில் 962 பேர் பங்கேற்றனர்; 660 பேர் இடங்கள் பெற்றனர்.எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு அரசு கல்லுாரிகளில் - 84; சுய நிதி கல்லுாரிகளில் - 114, அரசு பல் மருத்துவக் கல்லுாரியில் 16 இடங்களே மீதம் உள்ளன. இன்றுடன் முதற்கட்ட கலந்தாய்வு முடிகிறது. பெரும்பாலான இடங்கள் நிரம்பி விடும் என தெரிகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.