!!!

"PG to HM 2016-2017 combined seniority to download
முக்கிய செய்திகள்:

திங்கள், 29 ஜூன், 2015

சிறுபான்மையினர் உதவி பெற சுய சான்று அளித்தால் போதும்
                                    மத்திய அரசு நலத்திட்டங்களின் பயன்களை பெற, சிறுபான்மையினர், சுய சான்று அளித்தால் போதும்' என, மத்திய அரசு கூறியுள்ளது.  முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், பவுத்தர், பார்சிக்கள், ஜைனர் ஆகிய ஆறு மதத்தவர், சிறுபான்மையினராக, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு நலத்திட்டங்களை பெற, சிறுபான்மையினர் என்பதற்கான சான்றிதழை, அரசு உயரதிகாரிகளிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.


ஆனால், மத்திய அரசு திட்டங்களின் கீழ், தமக்கு சேர வேண்டிய பயன்கள் கிடைப்பதில்லை என, மத்திய அரசிடம் சிறுபான்மையினர் புகார் செய்து வந்தனர். இந்நிலையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, மாநில அரசுகளுக்கு, சமீபத்தில் அனுப்பியுள்ள கடிதத்தில், ''சிறுபான்மையினர், மத்திய அரசு நலத்திட்டங்களில் அளிக்கப்படும் பயன்களை பெற, அரசு உயரதிகாரிகளிடமிருந்து சான்றிதழ்களை பெற வேண்டிய அவசியம் இல்லை. சிறுபான்மையினர் என்பதை உறுதி செய்ய, சுய சான்று அளித்தால் போதும்,'' என, கூறப்பட்டுள்ளது.

Facebook Comments

0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

+2 அரையாண்டு -2016 விடைக் குறிப்புகள்-padasalai


http://2.bp.blogspot.com/_JwD5r652h00/SvDBBw_U6MI/AAAAAAAAAQ4/KDKaH8OTDO4/s400/bttp-9.png