கழிப்பறையை சுத்தம் செய்த மாணவியருக்கு ரூ.25,000: இழப்பீடு வழங்க அரசுக்கு "நோட்டீஸ்!'
கழிப்பறையை சுத்தம் செய்த, பள்ளி மாணவியருக்கு, ஏன், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது' என கேட்டு, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
உத்தரவுதிருநெல்வேலி மாவட்டம், வெட்டான்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளித் தலைமை ஆசிரியை உத்தரவின் படி, இரண்டு மாணவியர், கழிப்பறையை சுத்தம் செய்துள்ளனர்.இது தொடர்பாக விசாரித்த போது, இரண்டு மாணவியரும், துப்புரவுப் பணியாளரின் குழந்தைகள். சம்பவம் நடந்த அன்று, துப்புரவுப் பணியாளர் பணிக்கு வராததால், அவரது குழந்தைகளை, கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில், தலைமை ஆசிரியை ஈடுபடுத்தி உள்ளார் என தெரிய வந்தது.வாரம் 20 ரூபாய்மேலும், இப்பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளருக்கு, வாரம், 20 ரூபாய், சம்பளம் வழங்கப்படுகிறது. இது நியாயமான ஊதியம் அல்ல.இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், நீதிபதி முருகேசன், 'கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட, இரண்டு மாணவியருக்கு, ஏன், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது' என, விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.மேலும், மாணவியரை இப்பணியில் ஈடுபடுத்திய, தலைமை ஆசிரியை மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பரிந்துரை செய்துள்ளார்.துப்புரவுப் பணியாளருக்கு, குறைந்த ஊதியம் வழங்குவது தொடர்பாக, ஆறு வாரங்களுக்குள், பதில் அளிக்கும்படி, சமூக நீதித்துறை செயலருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
கழிப்பறையை சுத்தம் செய்த, பள்ளி மாணவியருக்கு, ஏன், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது' என கேட்டு, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது.
உத்தரவுதிருநெல்வேலி மாவட்டம், வெட்டான்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளித் தலைமை ஆசிரியை உத்தரவின் படி, இரண்டு மாணவியர், கழிப்பறையை சுத்தம் செய்துள்ளனர்.இது தொடர்பாக விசாரித்த போது, இரண்டு மாணவியரும், துப்புரவுப் பணியாளரின் குழந்தைகள். சம்பவம் நடந்த அன்று, துப்புரவுப் பணியாளர் பணிக்கு வராததால், அவரது குழந்தைகளை, கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில், தலைமை ஆசிரியை ஈடுபடுத்தி உள்ளார் என தெரிய வந்தது.வாரம் 20 ரூபாய்மேலும், இப்பணியில் ஈடுபடும் துப்புரவுப் பணியாளருக்கு, வாரம், 20 ரூபாய், சம்பளம் வழங்கப்படுகிறது. இது நியாயமான ஊதியம் அல்ல.இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், நீதிபதி முருகேசன், 'கழிப்பறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட, இரண்டு மாணவியருக்கு, ஏன், 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது' என, விளக்கம் கேட்டு, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.மேலும், மாணவியரை இப்பணியில் ஈடுபடுத்திய, தலைமை ஆசிரியை மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், பரிந்துரை செய்துள்ளார்.துப்புரவுப் பணியாளருக்கு, குறைந்த ஊதியம் வழங்குவது தொடர்பாக, ஆறு வாரங்களுக்குள், பதில் அளிக்கும்படி, சமூக நீதித்துறை செயலருக்கு உத்தரவிட்டு உள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.