ஐ.ஐ.எம்., வரைவு மசோதாவில் திருத்தம் செய்ய பரிசீலனை
ஐ.ஐ.எம்., எனப்படும், இந்திய மேலாண்மை கல்வி மையங்களின், தன்னாட்சி அதிகாரங்களில் தலையிடும் சில ஷரத்துக்களை, நீக்குவது குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், தீவிர பரிசீலனையில் உள்ளது.
கடும் கிராக்கி
ஐ.ஐ.எம்.,களில் பயிலும் மாணவர்களுக்கு, சர்வதேச அளவில், பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியில், கடும் கிராக்கி உள்ளது. ஐ.ஐ.எம்.,களில் பயின்ற பல மாணவர்கள், உலகின் பெரிய நிறுவனங்களில், உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். ஐ.ஐ.எம்., கல்வி மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணம், பேராசிரியர்களின் ஊதியம் மற்றும் நிர்வாகம் தொடர்பான விஷயங்களில், மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையில், வரைவு மசோதாவை, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை தயாரித்துள்ளது.
இப்புதிய வரைவு மசோதாவுக்கு, ஐ.ஐ.எம்., மையங்களின் பல இயக்குனர்கள் உள்ளிட்ட கல்வி யியலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஐ.ஐ.எம்., களின் தன்னாட்சி அதிகாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வரைவு மசோதாவில் திருத்தம் செய்ய, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது.
இறுதி முடிவு
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.