இன்ஜி., பொது கவுன்சிலிங் இன்று துவக்கம்
தமிழகத்தில் உள்ள, 539 இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்ப்பதற்கான பொது கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலையில், இன்று துவங்குகிறது. இரண்டு லட்சம் இடங்களுக்கு, ஒரு மாதம் வரை கவுன்சிலிங் நடக்கும்.
* காலை 10:00 மணிக்கு, கவுன்சிலிங் துவங்கும்.
* தினமும் எட்டு பிரிவுகளில், ஒரு பிரிவுக்கு, 600 பேருக்கு என, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
* வரும் 28ம் தேதி வரை, பொது கவுன்சிலிங் நடக்கும்.
* ஜூலை 29ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
அத்துடன், சுரங்கவியல் படிப்புக்கு, இந்த ஆண்டு மாணவியரும் சேர்க்கப்படுகின்றனர். இப்படிப்பை தேர்வு செய்ய, சில உடல் தகுதி நிபந்தனைகளை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.