பணமின்றி தவித்த மாணவர் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார்
ம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த தர்மபுரி மாணவர் கார்த்திக், சேலம் அரசு கல்லுாரியில் நேற்று சேர்ந்தார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, கக்கன்ஜிபுரத்தைச் சேர்ந்தவர் வேலு; தள்ளுவண்டி வியாபாரி. இவரது மகன் கார்த்திக். குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்ட அவர், பிளஸ் 2 தேர்வில், 1,156 மதிப்பெண் எடுத்தார். சேலம் அரசு கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., கிடைத்தும், கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் கட்ட முடியாமல் தவித்து வந்தார். இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானதும், பலரும் உதவ முன்வந்துள்ளனர். கல்லுாரியில் சேர கடைசி நாளான நேற்று, சேலம் அரசு மருத்துவக் கல்லுாரியில், கார்த்திக் சேர்ந்தார். அவரது தாய் லட்சுமி கூறுகையில், ''தற்போது, கடன் பெற்று மகனை சேர்த்து விட்டோம். ', பலரும் உதவ முன்வருகின்றனர். அனைவரின் உதவியைப் பெறுவது சரியல்ல; யாராவது ஒருவரிடம் மட்டுமே பெறுவோம்,'' என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.