ஐ.ஏ.எஸ்., : பணிகளை துவக்கும் நடைமுறை மாற்றம்
ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்வு பெற்றோர், தங்கள் பணிகளை துவக்கும் நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அமைச்சர், ஜித்தேந்திர சிங் கூறியதாவது:ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்வு பெற்றவர்கள், அந்தந்த மாநில, 'கேடரில்' தான், தங்கள் பணிகளை துவக்குவர். இதில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல், ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்வு பெற்றவர்கள், முதல் முறையாக, டில்லியில், மத்திய அரசின் கீழ், தங்கள் பணிகளை துவக்குவர். மூன்று மாதம், டில்லியில் பணியாற்றியபின், அந்தந்த மாநிலங்களுக்கு மாற்றப்படுவர். இதன்மூலம், முதலில் மத்திய அரசின் கீழ் பணியாற்றிய அனுபவம் அவர்களுக்கு கிடைக்கும்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.