18 நாளுக்கு பின் பள்ளிகள் திறப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாள் தொடர் விடுமுறைக்கு பின், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.முதல் நாளான நேற்று, 30 சதவீத மாணவர்கள் வரவில்லை. மழையில் பாதிக்கப்பட்டு, அரசு முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியுள்ள குழந்தைகளும் வந்திருந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்
களுக்கு, நேற்று புதிய நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன; சீருடைகளும் வினியோகம் செய்யப்பட்டன. வராத மாணவர்களை அறிந்து, அவர்களின் முகவரிக்கு ஆசிரியர்களை அனுப்பி, ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், விடுமுறை நாட்களை சரிகட்ட, மாதிரி தேர்வுகளை ரத்து செய்து, அரையாண்டுக்கான பாடத்தை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மேலும், பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 18 நாள் தொடர் விடுமுறைக்கு பின், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.முதல் நாளான நேற்று, 30 சதவீத மாணவர்கள் வரவில்லை. மழையில் பாதிக்கப்பட்டு, அரசு முகாம்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியுள்ள குழந்தைகளும் வந்திருந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்
களுக்கு, நேற்று புதிய நோட்டு மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன; சீருடைகளும் வினியோகம் செய்யப்பட்டன. வராத மாணவர்களை அறிந்து, அவர்களின் முகவரிக்கு ஆசிரியர்களை அனுப்பி, ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.இந்நிலையில், விடுமுறை நாட்களை சரிகட்ட, மாதிரி தேர்வுகளை ரத்து செய்து, அரையாண்டுக்கான பாடத்தை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.மேலும், பள்ளி வளாகம், வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.