தமிழகத்தில் வரும் 11 வரைசுங்க கட்டணம் வசூலிக்க தடை
:வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில், வரும், 11ம் தேதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில், சுங்க கட்டணம் வசூலிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:தமிழகம் கடுமையான மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, நிவாரண உதவிகள் வழங்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்லவும், வாகனப் போக்குவரத்து இன்றி
யமையாததாக உள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனப் போக்குவரத்துக்கு, சுங்க கட்டணம் வசூலிக்க, வரும், 11ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.