சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை 14-ந் தேதி திறக்க ஏற்பாடு
பள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறை முடிந்து மீண்டும் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் ஏனைய அனைத்து மராமத்து பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
14-ந் தேதி பள்ளிகள் நடத்தப்படும் நிலையில் உள்ளது என்று உறுதிபடுத்தும் வகையில் அனைத்து தலைமையாசிரியர்களிடமும் உறுதிமொழி கடிதத்தை பெற்று தொகுத்து தனி நபர் மூலம் பள்ளிக்கல்வி இயக்குனர் பெயரிட்ட உறையில் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கண்ணப்பன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.