கும்பகோணம் பள்ளி தீ விபத்து தனிநபர் ஆணையம் விசாரணை
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில், 2004ம் ஆண்டு, ஜூலை 16ம் தேதி, ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில், ஏற்பட்ட தீ விபத்தில், 94குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர்.தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில், மேலும் இழப்பீடு வழங்கக்கோரி, பெற்றோர்கள் ஐகோர்ட்டில் முறையிட்டனர்.இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்திடம், பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மனு தாக்கல் செய்தனர்.இதுவரை, 20 கட்டமாக, நீதிபதி வெங்கட்ராமன், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்தார்.இதையடுத்து நேற்று முன்தினம் ஆசிரியைகள் மூவரிடமும், ஓய்வு பெற்ற உதவி கல்வி அதிகாரி, மருத்துவ பரிசோதனை செய்த டாக்டர், ஓய்வு நகரமைப்பு அலுவலர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. அடுத்த விசாரணை, மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.