தலைமை ஆசிரியரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் சஸ்பெண்ட்
:தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராதாகிருஷ்ணன். சில மாதங்களுக்கு முன்பு தொட்டப்பநாயக்கனூரில் இருந்து தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணி மாறுதலாகி வந்திருந்தார்.
பள்ளியில் பணிபுரிந்து வரும் மற்ற ஆசிரியர்களுடன் சுமூகமான தொடர்பு இல்லாததால் மற்ற ஆசிரியர்களுடன் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியர் செல்வராஜ் அறைக்கு சென்ற உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன், சில காரணங்களை முன்வைத்து அவருடன் தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றியதால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியரை தாக்கியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பள்ளியில் இருந்த மாணவர்கள் மற்ற ஆசிரியர்கள் சண்டையை விலக்கி விட்டனர். இது குறித்து தலைமை ஆசிரியர் செல்வராஜ் கொடுத்த புகாரில் ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
நடந்த சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் வாசு தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்களை நேரில் வரவழைத்து அலுவலகத்தில் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.