காத்திருக்கும்இலவச 'லேப் டாப்'கள்
எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்களின் வருகைக்காக பள்ளிகளில் மாணவர்களுக்கான இலவச 'லேப் டாப்' கள் வினியோகிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளன.தமிழக அரசு சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச 'லேப் டாப்' வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை பொதுத்தேர்வு முடிந்த பின் வழங்கப்பட்டது; தற்போது பிளஸ் 2 படிக்கும் போதே வழங்கப்படுகிறது.
பரிதவிப்பு: டிச., 31க்குள் அனைத்து மாணவர்களுக்கும் 'லேப் டாப்' வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் அவற்றை ஆளுங்கட்சி எம்.பி.,-- எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்டு வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தற்போது பெரும்பாலான எம்.பி.,- எல்.எல்.ஏ., க்கள் சென்னை, கடலுார் வெள்ள நிவாரணப்பணியில் உள்ளனர். இதனால் 'லேப் டாப்' வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.