தென் மாவட்டங்களில் மழை தொடரும்
காற்று மேலடுக்கு சுழற்சியால், தென் கடலோர மாவட்டங்களில், நான்கு நாட்கள் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவிததுள்ளது.இதுகுறித்த அறிக்கை: குமரி கடல் மற்றும் இலங்கை அருகே, காற்று மேல் அடுக்கு சுழுற்சி மையம் கொண்டு உள்ளது. இதனால், தமிழக தென் கடலோர மாவட்டங்களில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, நெல்லை மாவட்டம், செங்கோட்டை - 6; துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம், சாத்துார் - 4; ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் - 3 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.