மாணவர்கள் போராட்டத்தால் 11 மணிக்கு தேசிய கொடி ஏற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே, குடுமித்தாங்கல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளி கட்டடம், இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு, தேசிய கொடியேற்ற பள்ளிக்கு தலைமை ஆசிரியை ஜெயசீலி வந்தார். அப்போது, மாணவர்கள், தங்கள் பெற்றோர்களுடன் வந்து, தலைமை ஆசிரியை ஜெயசீலியை முற்றுகையிட்டு, தேசியக் கொடியை ஏற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர்.பஞ்சாயத்து தலைவர் விஜயகீர்த்தி பேச்சு நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தார். இதனால், தேசியக் கொடி, காலை, 11:00 மணிக்கு ஏற்றப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.