வருவாய்த்துறை சங்கத்துடன் அரசு நடத்திய பேச்சு தோல்வி
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்துடன், அரசு நடத்திய பேச்சு, தோல்வியில் முடிந்தது. எனவே, 'திட்டமிட்டபடி, 'ஸ்டிரைக்' நடக்கும்' என, இச்சங்கம் அறிவித்துள்ளது.வருவாய் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தாசில்தார்களுக்கு மீண்டும், 1,000 ரூபாய் தனி ஊதியம் தர வேண்டும்; தேர்தல் பிரிவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், பல போராட்டங்களை நடத்தி வருகிறது.
பிரச்னைக்கு தீர்வு காண, சங்க நிர்வாகிகளுடன், வருவாய் துறை செயலர் வெங்கடேசன், நேற்று, தலைமை செயலகத்தில் பேச்சு நடத்தினார். இது, தோல்வியில் முடிந்தது. இதனால், 'திட்டமிட்டபடி, பிப்., 2, 3ல், ஸ்டிரைக் நடக்கும்' என, வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.