.
ஞாயிறு, 3 ஜனவரி, 2016
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுக்கு தயாராகும் வகையில் வெள்ள பாதிப்பு மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கப்பட்டது. இதேபோன்று 3-ம் பருவ பாடப்புத்தகங்களும் வினியோகிக்கப்பட்டது.
தமிழ்நாடு பாடநூல் சேவை கழகம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு தமிழகம் முழுவதும் முதன்மை கல்வி அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதையொட்டி சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் ஆகியவைவழங்கப்பட்டன. அந்த புத்தகங்களை கொண்டு முதல் நாளான நேற்றே ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினர். மாணவ-மாணவிகளும் புது பாடத்திட்டங்களை ஆர்வத்துடன் படித்தனர்.
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.