மே முதல் வாரத்தில் தமிழகத்தில் தேர்தல்?
தமிழக சட்டசபை தேர்தல், மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு, மே, 22ம் தேதிக்குள், சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும்.
அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், நான்கு அல்லது ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெறும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். எனவே, தேர்தல் தேதி, மார்ச், 2 அல்லது 3ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளில், ஏப்., 21ம் தேதி வரை, தேர்வு நடக்கிறது. எனவே, அதன்பின் தான் தேர்தல் நடத்தப்படும். மே, 9ம் தேதி, அட்சய திருதியை வருகிறது. அந்நாளை, சில மாநிலங்களில் விழா போல கொண்டாடுவதால், அந்த நாளை தவிர்த்து, ஏப்., 21ம் தேதியில் இருந்து, மே, 7ம் தேதிக்குள் அல்லது மே, 10ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓட்டுப்பதிவு நடைபெற வாய்ப்புள்ளதாக, தேர்தல் கமிஷன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.