வணிகவரித்துறையினர் இன்று முதல் போராட்டம்
அமைச்சர் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படாததால், வணிகவரித் துறை ஊழியர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம், இன்று துவங்குகிறது. வணிகவரித் துறையில் காலியாக உள்ள, 50 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும்; என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வணிகவரித் துறை ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு, ஜன., 18, 19 ஆகிய தேதிகளில், ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்தியது. இதை அரசு கண்டு கொள்ளாததால், இன்று முதல், கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளனர். வணிகவரித் துறை ஊழியர் சங்க கூட்டு நட வடிக்கை குழு நிர்வாகிகளிடம், அமைச்சர் சம்பத், துறை செயலர் நசிமுதீன், ஆணையர் பிரபாகரன் பேசினர். இதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, இன்றைய போராட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.