அரசு ஊழியர்கள்உண்ணாவிரதம்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், நேற்று உண்ணாவிரதம் நடந்தது.சென்னை சேப்பாக்கத்தில் நடந்த, உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, தேவேந்திரன், சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு பணியாளர்களுக்கு என, தனி ஊதியக்குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.