10ம் வகுப்பு தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மாற்றம்
பரமக்குடியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், இரண்டு அரசு மற்றும், மூன்று அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் என, மொத்தம், ஐந்து தேர்வு மையங்களில், 10ம் வகுப்பு தேர்வு நடக்கிறது.
இங்கு அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் என, 30 பள்ளிகளைச் சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் நேற்று, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு, ஐந்து தேர்வு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை, வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார். இவை, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறியதாவது: பரமக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன், பிளஸ் 2 தேர்வில், அறை கண்காணிப்பாளர்கள், மாணவர்களுக்கு உதவியதாக வந்த தகவலையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். இது போன்ற புகாரின் அடிப்படையில், 10ம் வகுப்பு தேர்வு மைய ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்துள்ளேன், இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.