செயல்படாத பி.எப்., கணக்குகளுக்கும் வட்டி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில்(பி.எப்.,) 36 மாதங்கள் பணம் செலுத்தப்படாமல் இருந்தால், அது செயல்படாத கணக்காகக் கருதப்பட்டு, அதற்கு வட்டி வழங்கும் நடைமுறை கடந்த 2011-ம் ஆண்டு காங்., ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேல் செயல்படாமல் இருக்கும் பி.எப்., கணக்கில் உள்ள தொகைக்கும் வட்டி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்தரேயா நேற்று டில்லியில் வெளியிட்டார். இந்நடைமுறை ஏப்.,1ம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 9 கோடி பேர் பயனடைவர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.