அரசு பஸ் படிக்கட்டு கழன்று விழுந்தது: அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்
:-விருதுநகரில், அரசு பேருந்தின் படிக்கட்டு திடீரென கழன்று விழுந்தது. இதில் பயணித்த மாணவர்கள், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.அருப்புகோட்டையிலிருந்து விருதுநகர் வழியாக ராஜபாளையம் சென்ற அரசு பேருந்து, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில்இருந்து, நேற்று மாலை, 5:10 மணிக்கு, 80க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது.
மாலை நேரம் என்பதால், பேருந்தில் அதிகளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இருந்தனர். விருதுநகர் ஹாஜிபி பள்ளி அருகே வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, பேருந்தின் பின்பக்க
படிக்கட்டு, திடீரென கழன்று கீழே விழுந்தது.வேகத்தடையில் பேருந்து மெதுவாக சென்றதால், படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள், கீழே குதித்து உயிர் தப்பினர்.
பேருந்து வேகமாக செல்லும் போது படிக்கட்டு கீழே விழுந்திருந்தால், பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, ''இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஒரே வரியில் முடித்துக் கொண்டார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.