பொது தேர்வு முடிவில் பயமா?'104'ல் சிறப்பு ஆலோசனை
அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், அச்சமின்றி தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளும் வகையில், இன்று முதல், '104' சேவையில், சிறப்பு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து '104' சேவை மைய, விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:தமிழக சுகாதார திட்டத்தின் கீழ், தொலைபேசி வழியே மருத்துவ தகவல்கள் தரும், 24 மணி நேர, '104' சேவை மையம் செயல்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே முதல் வாரம் வெளியாக உள்ளதால், மாணவர்கள், தேர்வு முடிவுகளை, அச்சமின்றி எதிர்கொள்ளவும், தன்னம்பிக்கையோடு, எதிர்காலத்தில் திட்டமிட்டு வெற்றி பெறவும் வழிகாட்டும், மனநல ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, மூன்று உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள், பெற்றோர் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; மாணவர்கள் தவறான முடிவுகளை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.