'பிட்' அடித்து பிடிபட்டவர் தப்பி ஓட்டம்
பரமக்குடியில், பிளஸ் 2 பொருளியல் பாடத்தேர்வில், 'பிட்' அடித்து பிடிப்பட்ட தனித்தேர்வர் தப்பி ஓடினார்.முதுகுளத்துார் அருகே, கிடாத்திருக்கை பகுதி யைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன்; பிளஸ் 2 தனித்தேர்வர். இவர், பொருளியல் பாடத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். பரமக்குடி தனியார் பள்ளியில், நேற்று இத்தேர்வை எழுதிய போது, இவர் பிட் அடித்தார்.
ஆய்வு செய்த தேர்வு பறக்கும் படை அதிகாரி கள், மாணவரை பிடித்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர். கோவிந்தராஜனை, போலீசார் தேடி வருகின்றனர். இதனால், பிட் அடித்தவர்கள் பட்டிய லில் அவரது பெயரை சேர்க்க முடியாத நிலை உள்ளதாக, தேர்வு மைய அதிகாரிகள் கூறினர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.