பிளஸ் 2 பொதுத்தேர்வு : ஏப்.23க்குள் விடைத் தாள்களை திருத்தி முடிக்கவேண்டும்
தமிழகத்தில் கடந்த மார்ச் 4ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, கடந்த 1ம் தேதி நிறைவடைந்தது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துவிட்டது. கடந்த 7ம் தேதி முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் மொத்தம் 48 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 16ம் தேதி நடைபெறுவதால், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் அல்லது 2வது வாரத்தில் அறிவிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. இதனால் பிளஸ் 2 பொதுத்தேர்வின் விடைத்தாள்களை வருகிற 23ம் தேதிக்குள் திருத்தி முடிக்கவேண்டும். பின்னர் விடைத்தாள்களின் மதிப்பெண்களை கணினியில் பதிவு செய்து, அதை சிடிக்குள் ஏற்றி வருகிற 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
|
.
ஞாயிறு, 17 ஏப்ரல், 2016
Facebook Comments
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.