பள்ளியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள மரம் வெட்டிக் கடத்தல்
பள்ளியில் இருந்து, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரத்தை வெட்டி கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் சலவன்பேட்டையில், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில், 60 ஆண்டுகள் பழமையான புளிய மரம், அரச மரம், வேல மரம் என, பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. நேற்று முன் தினம், பள்ளியை மூடிவிட்டு தலைமை ஆசிரியர் மணிகண்டன் சென்றார். நேற்று காலை, 8 மணிக்கு பள்ளியை திறந்த போது, பள்ளிக்கு பின்புறத்தில் இருந்த, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வேல மரத்தை, மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் மணிகண்டன் கொடுத்த புகாரின் படி, வேலூர் வடக்கு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.