பதவி உயர்வு சிக்கலால் போராட்டம்:வருவாய் சங்கத்துடன் அரசு பேச்சு
தேர்தல் கமிஷனுக்கு எதிராக போராட்டம் அறிவித்த, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்துடன், உயர் அதிகாரிகள் சமரச பேச்சு நடத்தினர்.தமிழக வருவாய்த்துறையில், தாசில்தார், துணை தாசில்தார் பதவி உயர்வுக்கான பட்டியல் தயாராக இருந்தும், சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பால், பதவி உயர்வு தரப்படவில்லை. வழக்கமான பதவி உயர்வு தான் என்பதால், தேர்தல் கமிஷனிடம் அனுமதி கோரப்பட்டது; ஒரு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
அதிருப்தி அடைந்த, வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்; பின், மாநில அளவில், சென்னையில் போராட்டமும் அறிவித்தனர். இதுகுறித்த செய்தி, நேற்று, நமது நாளிதழில் வெளியானது. வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், சங்க நிர்வாகிகளுடன், சமரச பேச்சு நடத்தினர்.
இதுகுறித்து, சங்க பொதுச் செயலர் சிவஜோதி கூறுகையில், ''வருவாய் நிர்வாக கமிஷனரும், திருவண்ணாமலை கலெக்டரும் பேசி, 'விரைவில் பதவி உயர்வுக்கு அனுமதி கிடைக்கும்' என, உறுதி அளித்ததால், போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம். ஏப்., 22க்குள், அனுமதி கிடைக்காவிட்டால், போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.-
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.