பள்ளி தீ: இழப்பீடுக்கு முறையீடு
:கும்பகோணம் தீ விபத்து சம்பவத்தில், பலியான குழந்தைகளின் குடும்பத்துக்கு, இழப்பீடு தொகையை அதிகரிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையிடப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில், 2004 ஜூலை மாதம் தீ விபத்து ஏற்பட்டது. அதில், 94 குழந்தைகள் பலியாகின; 16 பேர் படுகாயமடைந்தனர்; சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை, உயர் நீதிமன்றம் நியமித்தது. அவரும் விசாரணை நடத்தி, அறிக்கை அளித்தார். பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு, தலா, ஐந்து லட்சம் ரூபாய்; படுகாயம் அடைந்த, மூவருக்கு, தலா ஆறு லட்சம் ரூபாய்; மற்ற மூவருக்கு, தலா, ஐந்து லட்சம் ரூபாய்; மீதி உள்ளவர்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய், என, நிர்ணயிக்கப்பட்டது.
இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக, ஏப்., 29ம் தேதிக்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.இதையடுத்து, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் முன், வழக்கறிஞர் தமிழரசன் ஆஜராகி, ''இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை; அதிகரிக்க வேண்டும்; இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்,'' என்றார். அதற்கு, தலைமை நீதிபதி, ''விசாரணையை, 29ம் தேதி அன்றே எடுத்துக் கொள்ளலாம்,'' என்றார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.