திருச்சியில் பிளஸ்2 விடைத்தாள் நகல் கேட்டு 4,000 மாணவர்கள் பதிவுமறு கூட்டலுக்கு 100 பேர் விண்ணப்பம்
திருச்சி, பிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் கோரி 100 பேரும், விடைத்தாள் நகல் கோரி 4,000 மாணவ, மாணவிகளும் பதிவு செய்துள்ளனர்.
பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 17ம் தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மறு தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலம் வசதி செய்யப்பட்டு உள்ளது. 24ம் தேதி முதல் ேநற்று வரை அந்தந்த பள்ளிகளில் ஆன்லைன் மூலம் திருச்சி மாவட்டத்தில் 1,100க்கு மேற்பட்டோர் மறு தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இதேபோல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க கடந்த 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 100 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு விடைத்தாள்களின் நகல் கேட்டு 4,000 பேர் பதிவு செய்து உள்ளனர். மறுதேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தட்கல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.மேலும் 10ம் வகுப்பு தேர்வில் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். 10ம் வகுப்பில் விடைத்தாள் நகல் யாருக்கும் வழங்குவதில்லை. எனவே அதற்கான விண்ணப்பமும் கோரப்படவில்லை.அக்னிநட்சத்திரம் இன்றுடன் முடிகிறது
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.