உள்ளாட்சி தேர்தலுக்குதயாராகும் வாக்காளர் பட்டியல்
சட்டசபைத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, உள்ளாட்சித் தேர்தலை அக்டோபர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற் கட்டமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை துவங்க ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மாவட்ட தேர்தல் பிரிவிடம் இருந்து வாக்காளர் பட்டியலை பெற்றுள்ளனர். தொகுதி வாரியாக உள்ள வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் வார்டு வாரியாக பிரித்து புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க உள்ளனர். இந்த பட்டியல் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அந்தந்த மாவட்டங்களில் தனியாக பி.டி.ஓ.,க்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.