மறு மதிப்பீடுக்கு கூடுதல் அவகாசம்
பிளஸ் 2 மறு மதிப்பீட்டுக்கான, 'ஆன்லைன்' பதிவை, இன்று ஒரு நாள் மட்டும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நீட்டித்துள்ளது.'சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின் கீழ், பிளஸ் 2 தேர்வுக்கான மறு மதிப்பீட்டுக்கு, ஆன்லைன் மூலம், ஜூன் 9 வரை பதிவு செய்யலாம்' என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களின் வேண்டு கோளை ஏற்று, இன்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், மறு மதிப்பீடு கட்டணத்தை, வரும், 13ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.