இலவச 'லேப்டாப்' வினியோகம் தாமதம்?
சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்' உடன், இலவச இணைய இணைப்பு வழங்கப்படும்' என கூறப்பட்டு இருந்தது.
கவர்னர் உரையில், அது பற்றிய விளக்கம் இடம்பெறும் என எதிர்பார்த்தனர். ஆனால், நேற்றைய கவர்னர் உரையில், 'மடிக்கணினி திட்டம் தொடரும்' என்று மட்டும் கூறப்பட்டு உள்ளது.
இதனால், அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, இந்த ஆண்டு, லேப்டாப் வினியோகம் தாமதமாகும் என தெரிகிறது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.