டி.என்.பி.எஸ்.சி., புது உறுப்பினர்கள்:'பயோ - டேட்டா' தாக்கல் செய்ய உத்தரவு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின், 'பயோ - டேட்டா'வை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும், டி.என்.பி.எஸ்.சி.,க்கு, புதிதாக, 11 உறுப்பினர்களை நியமித்து, தமிழக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, 2016 ஜன., 31ல் உத்தரவு பிறப்பித்தது.
மீண்டும் விசாரணை:இதை எதிர்த்து, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பா.ம.க., மற்றும் புதிய தமிழகம் கட்சிகளின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தி.மு.க., - எம்.பி., இளங்கோவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''டி.என்.பி.எஸ்.சி.,க்கு புது உறுப்பினர்கள் நியமிப்பது தொடர்பாக, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான ஆலோசனைகளை, நீதிமன்றத்தின் ஆய்வுக்கு தாக்கல் செய்ய வேண்டும். உறுப்பினர்கள் தேர்வு செய்ய பின்பற்றப்பட்ட நடைமுறையையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நியமன விஷயத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளது,'' என, வாதிட்டார்.
தள்ளி வைப்பு:தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, ''டி.என்.பி.எஸ்.சி.,க்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின், 'பயோ - டேட்டா'க்கள் நீதிமன்றத்தின் பார்வைக்கு தாக்கல் செய்யப்படும்,'' என, உறுதியளித்தார். இதையடுத்து, 'வழக்கில் சம்பந்தப்பட்டோர் அனைவரும், தங்கள், 'பயோ - டேட்டா'க்களை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை, ஆக., 4க்கு தள்ளிவைத்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.