ஜெ., படித்த பள்ளி ஆசிரியை மறைவு அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் அஞ்சலி
:முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளி ஆசிரியை கேத்தரின் சைமன், மரணமடைந்தார். அவரது உடலுக்கு, முதல்வர் சார்பில் அமைச்சர் பெஞ்ஜமின், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.முதல்வர் ஜெயலலிதா, சென்னை பிரசன்டேஷன் கான்வென்ட் சர்ச் பார்க் பள்ளியில் படித்தார். அப்போது, அவருக்கு ஆசிரியராக இருந்த கேத்தரின் சைமன், நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி: எனக்கு ஆசிரியராக இருந்த கேத்தரின் சைமன் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மிகவும் உன்னதமான ஆசிரியர் தொழிலுக்காக, வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
கடந்த 1958 முதல், 1964 வரை, பிரசன்டேஷன் கான்வென்ட் சர்ச் பார்க் பள்ளியில், அவரது மாணவியாக இருக்கும் நல்வாய்ப்பை பெற்றேன். என் வாழ்க்கையில், அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆசிரியர் - மாணவருக்கு இடையே சிறப்பான நல்லுறவை பகிர்ந்து கொண்டோம்.
சர்ச் பார்க் பள்ளியில் அவருடன் பழகும் வாய்ப்பை பெற்ற, பல தலைமுறை மாணவியருக்கு அவர் உந்து சக்தியாக இருந்தார். அவரது இரக்க குணம், உறுதியான நிலைப்பாடு ஆகியவை, நுாற்றுக்கணக்கான இளம் சமூகத்தினரை, நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்கி உள்ளது. ஆசிரியர் கேத்தரின் சைமனின் ஆன்மா அமைதி பெற வேண்டும்.முதல்வர் சார்பில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பெஞ்ஜமின் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், கேத்தரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.