3 மாணவர்கள் 'பிட்': 3 ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
தேனி: தேனியில், பிளஸ் 2 தேர்வில், 'பிட்' அடித்த மூன்று மாணவர்களை, பறக்கும் படையினர் பிடித்தனர். இவர்களை முன்கூட்டியே பிடிக்காததற்காக, கண்காணிப்பு பணியை செய்த, அரசு பள்ளி ஆசிரியர் மூன்று பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். மாணவர்கள் 'பிட்' வைத்து எழுதியதை, முன்கூட்டியே கண்காணிக்க தவறியதாக, தேர்வு மையத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த, வைகை அணை அரசு பள்ளி ஆசிரியர் செல்வன், வடுகப்பட்டி அரசு பள்ளி ஆசிரியர்கள் வடிவேல், லட்சுமிநாராயணன் ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாசு உத்தரவிட்டார்.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.