தேர்வு அறையில் மாணவி மயக்கம்: ஒரு மணி நேரம் கூடுதல் வாய்ப்பு
நாகர்கோவில்: தேர்வு அறையில் மயங்கி விழுந்த மாணவிக்கு ஒரு மணி நேரம் கூடுதலாக தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. பிளஸ்2 வேதியல் தேர்வை, தோவாளை அரசு பள்ளியில் தேரேகால்புதூர் பகுதி தனியார் பள்ளி மாணவ மாணவிகளும் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் சரஸ்வதி என்ற மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் மயக்கமடைந்தார். தேர்வு அறை கண்காணிப்பாளர் இது பற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார். அவரது ஏற்பாட்டில் பெண் டாக்டர் குழுவினர் மயங்கிய மாணவிக்கு சிகிச்சை அளித்தனர். அவர் சகஜ நிலைக்கு திரும்பினார். இதில் ஒரு மணி நேரம் கடந்து விட்டது. பின்னர் அவர் தேர்வு எழுத விரும்பினார். இதனால் அவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
0 comments:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.